சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். வட்ட வடிவத்துக்கு எது தொடக்கம், எது முடிவு? சிவலிங்கம் நீள்வட்ட வடிவமாக உள்ளது. இந்தப் பிரபஞ்சத்தின் சுழற்சியே நீள்வட்டப் பாதையில்தான் அமைகிறது. ‘லிம்’ என்பது உலக முடிவில், அண்ட சாரசரங்களும் லயிப்பதற்குரிய இடம். ‘கம்’ என்பது லயித்த பொருட்கள் அனைத்தும் அதிலிருந்தே வெளிப்படுவதைக் குறிப்பது. எனவே, அனைத்தும் சிவனிடமிருந்தே தோன்றி, சிவனிடமே ஓடுங்கி, மீண்டும் சிவனிட மிருந்தே வெளிப்படுகின்றன. அந்த ஆதிபரம் பொருளான சிவன் தோற்றமும் முடிவுமற்றவன் என்பதனையே ‘லிங்க வடிவம்’ குறிக்கிறது.
SRI HARINI
Tuesday, November 22, 2011
Thursday, January 6, 2011
Subscribe to:
Comments (Atom)